நீட் தேர்வில் முறைகேடு, ஆள்மாறாட்டம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்ற கிளை

0 1064

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு மிக முக்கியமானது என்பதால் முறைகேடு மற்றும் ஆள் மாறாட்டம் நடைபெறாமல் கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான சிபிஐ அதிகாரி, பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகள் மூலம் நீட் தேர்வில்  முறைகேடுகளை தடுக்கலாம் என்றும், தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கண்காணிப்பை தீவிர படுத்தலாம் என்றும் கூறினார்.

இருப்பினும் முறைகேடுகளை தடுக்க என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளன என்பது குறித்து சிபிஐயும், சிபிசிஐடியும் பதில்மனுதாக்கல்  செய்ய உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கு விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments